எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மக்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா எனும் பெரும் தொற்றால் இவ்வுலகில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் அனுபவித்த துயரம் சொல்லில் அடங்காது.
மனிதர்கள் மட்டுமல்லாது நாய், பூனை, மாடுகள் உள்ளிட்ட விலங்கினங்கள் கூட தெருவில் நடமாடினாலும் உணவில்லாமல் தவித்தது.
எங்கு பார்த்தாலும் மரணங்கள், சோகங்கள், முக்கிய பிரமுகர்கள் , தெரிந்த இழப்புகள் என அடிக்கு மேல் அடி விழுந்தது.
சரி இருப்பதை வைத்து சாப்பிடலாம் என்றால் இருந்தால்தானே சாப்பிட முடியும் என்ற நிலை. வெளியில் செல்ல முடியவில்லை. ஆறுதலுக்காகவாவது நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் பார்க்க முடியாத நிலை என கொரோனா சோகங்களை பட்டியல் போட இந்த ஜென்மம் முழுவதும் முயன்றாலும் முடியாது அவ்வளவு கதைகள் இருக்கிறது கொரோனா பற்றி சொல்வதற்கு.
இந்த நிலையில் கடந்த செப்டம்பரில்தான் ஊரடங்கு ஓரளவு நீங்கியது மக்கள் ஓரளவு வெளியில் நடமாட ஆரம்பித்தார்கள். இப்போது உலகெங்கும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வேறு வருவதால் ஏற்கனவே கடும் வருத்தத்தில் இருந்தாலும் தீபாவளியையாவது சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தீபாவளி பர்சேஸ்க்காக தமிழ்நாட்டின் மாநகரங்கள், நகரங்களில் உள்ள முக்கிய கடை வீதிகளில் ஏறி இறங்கி வருகிறார்கள்.
இதனால் ஜவுளி வியாபாரம் மட்டுமின்றி, பட்டாசு வியாபாரம் , சாலையோர நடைபாதை வியாபாரிகள் என பலருக்கும் வியாபாரம் நடப்பதால் மக்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
வரும் தீபாவளி













