பறக்கும் தட்டில் மனிதர்கள், வேற்று கிரகவாசிகள் வந்தார்கள் என காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. பல இடங்களில் பறக்கும் தட்டு மனிதர்களை பற்றி விதம் விதமாக கதைகள் சொல்லப்பட்டு வருகிறது.
உலகமெங்கும் இது போல கதைகள் அடிக்கடி சொல்லப்பட்டு வருகிறது. வேற்றுக்கிரகத்தின் மனிதர்கள் உண்மையிலேயே பூமிக்கு இது போல பறக்கும் தட்டில் வருகிறார்களா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் அடிக்கடி இப்படி பறக்கும் தட்டில் வரும் மனிதர்களை பார்த்ததாக உலகம் முழுவதும் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நேற்று பறக்கும் தட்டு மனிதர்கள் வந்ததாகவும் ஏதோ பலூன் போல அடையாளம் தெரியாத ஒளிரக்கூடிய பொருளை மக்கள் பார்த்ததாகவும் இவர்கள் வேற்றுக்கிரக மனிதர்கள் ஆக இருக்குமோ என பரபரப்பு கிளம்பியுள்ளது.













