---Advertisement---

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம்சங்கர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிந்து 37 நாட்களுக்கு பிறகு இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அதன்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. கிட்டத்தட்ட 471 நாட்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.