தமிழ் சினிமாவில் ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் ராம்குமார். இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படம் குறித்துப் பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இயக்குநர் ராம்குமார் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
தனுஷுடன் தான் திட்டமிட்டுள்ள படம் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் கதையைக் கொண்டது என்றும், இதற்கு மிக அதிகமான கால்ஷீட் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தப் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளுக்காகப் பெரிய அளவில் பயிற்சி தேவைப்படுவதால், தனுஷ் சுமார் ஒரு வருட காலம் இந்தப் படத்திற்காக ஒதுக்கிச் செயல்பட வேண்டியிருக்கும் என ராம்குமார் கூறியுள்ளார்.

தற்போது தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களை 70 நாட்களில் முடித்து வரும் நிலையில், ஒரே படத்திற்காக ஒரு வருடத்தை ஒதுக்குவது அவருக்குச் சவாலாக உள்ளது. இதனாலேயே இந்தக் கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதே தவிர, படம் கைவிடப்படவில்லை. தற்போது, தனுஷு பலப்படங்களில் தனது கமிட்மென்ட்களில் தீவிரமாக உள்ளார்.
சரியான நேரம் அமையும் போது நிச்சயம் இந்தப் படம் தொடங்கும் என ராம்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘ராட்சசன்’ போன்ற ஒரு பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்த இயக்குநருடன் தனுஷ் இணையும் போது, அது உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.













