சென்னையில் மழை பெய்து வருகிறது தற்போது பருவமழைக்காலம் என்பதால் இனி அடிக்கடி மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கே வெள்ளம் வடியாமல் இருக்கிறது. இதை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
உடனடியாக மழைநீர் வடிய பாதுகாப்பும் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பேரிடர் மீட்பு படையினரை நிறுத்தி போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் கடந்த 2015 டிசம்பர் மாதம் வந்த வெள்ளம் போல் வந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.













