---Advertisement---

சவுக்கு சங்கருக்கு ஜாமின்… கோவை நீதிமன்றம் உத்தரவு..!

By Sri
Published on: July 26, 2024
---Advertisement---

பிரபல youtuber வரும் விமர்சகர்மான சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

youtuber சவுக்கு சங்கர் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருக்கின்றார். இது தொடர்பாக பெண் போலீசார் அளித்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கேட்டு சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி கோவை சைபர் கிரைம் போலீசார் பெண் காவலர் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் youtuber சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.