கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது. அது 2020 மார்ச் முதல் அமெரிக்கா, இத்தாலி, இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது.
உலக நாடுகளில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு சிறிது சிறிதாக கட்டுப்படுத்தப்பட்டன.
தற்போதும் சில மாதங்கள் முன் வரை இலங்கை, இந்தியா நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவியது.
தற்போது சீனா, ரஷ்யா நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. சீனாவில் மிக வேகமாக கொரோனா பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முயன்று வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.













