கொரொனா பாதிப்பு இன்று 1100ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 964 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 32 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 1162 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,333 இருந்த நிலையில், இன்றைய தினமான ஜுன் 1ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:








