மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கின்றது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வந்து கொண்டுள்ளது. எனவே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்களுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.







