---Advertisement---

தமிழக காவலர்கள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது… வெளியான அறிவிப்பு…!

By Sri
Published on: August 14, 2024
---Advertisement---

இந்தியா முழுவதும் 78 ஆவது சுதந்திர தின விழா நாளை விமர்சையாக கொண்டாட இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தில் இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தில் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஜி கண்ணன், ஐஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன் குமார், டிஎஸ்பி டில்லி பாபு, டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி சங்கு, டிஎஸ்பி ஸ்டீபன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அவருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.