---Advertisement---

மது கிடைக்காததால் மன உளைச்சல்! பிரபல நடிகையின் மகன் தற்கொலை முயற்சி!

By Sri
Published on: April 8, 2020
---Advertisement---

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மது கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 124 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690  ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.

கடந்த 14 நாட்களாக மது கிடைக்காததால் மதுப்பழகக்த்துக்கு அடிமையானவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஆங்காங்கே தற்கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன.  இந்நிலையில்  மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி என்பவரும் மது  கிடைக்காததால் மன உளைச்சலில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரைக் காப்பாற்றிய குடும்பத்தினர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.