மலையாள குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் கேரளாவில் உள்ள சிறை ஒன்றில் கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரித்து வருகிறார்.
மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களீல் நடித்திருப்பவர் இந்திரன்ஸ். இவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். ஆனால் இவர் சினிமாவுக்கு ஒரு காஸ்ட்யூம் டிசைனராகதான் அறிமுகமானார்.
இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜப்புரா சென்ட்ரல் ஜெயிலில் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறைக் கைதிகளுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். இது சம்மந்தமான வீடியொவை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மாஸ்க்குகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திரன்ஸின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.








