---Advertisement---

ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே வீடு- அசத்தும் இளைஞர்

Published on: October 10, 2020
---Advertisement---

முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கேற்ப எந்த ஒரு முயற்சியையும் செய்து பார்க்கலாம் என அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஒரு இளைஞர் சாதனை புரிந்துள்ளார்.

அந்த வகையில் ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே வீடு கட்டி அசத்தியுள்ளார் ஒரு இளைஞர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் அருண் பிரபு தான் இப்படியான ஒரு சாகசத்தை செய்துள்ளார்.

வீடு என்றால் சிமெண்ட் வைத்து கட்டுவதல்ல இரும்பு, கம்பி, தகரம் போன்ற மூலப்பொருட்களை வைத்துதான் இப்படி ஒரு வீட்டை கட்டி இருக்கிறார் அந்த இளைஞர். இந்த வீடு இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

36 சதுர அடி இடத்தில் படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, கழிப்பறை, குளியல் தொட்டி மற்றும் பணியிடம் மட்டுமல்ல, 250 லிட்டர் நீர் தொட்டியும் இந்த வீட்டில் உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.