தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
இதுவரை பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தும் கூட எம்.பி தேர்தலில் வெற்றி பெறாதது. தேமுதிகவுடன் கூட்டணி வைத்த மற்ற தேர்தல்களிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறாதது பாரதிய ஜனதாவுக்கு சற்று பின்னடைவான விசயம்.
எப்படியும் இந்த முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா, இளைஞர்கள் பலருக்கு முக்கிய பதவிகளை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்கிறது.
அதன் ஒரு பகுதியாக வேல் யாத்திரை என்ற ஆன்மிக யாத்திரை மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாரதியஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம் மாநில பாஜக தலைவர் முருகன். அக்டோபர் முதல் இந்த யாத்திரையை முருகன் தொடங்க இருக்கிறாராம்.













