தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘சுப்ரமணியபுரம்’. சசிகுமார் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், இன்றும் பலரின் ஆல்-டைம் ஃபேவரைட் படமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஆரம்பக்கட்ட வெற்றி குறித்தும், பிரபல இயக்குநர் பாக்யராஜ் அளித்த பாராட்டுப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஷாந்தனுவை நடிக்க வைப்பதற்காக, இயக்குநர் பாக்யராஜிடம் கதை சொல்லச் சென்றோம். சசிக்குமார் முழுக் கதையையும் சொல்லி முடித்தவுடன், பாக்யராஜ் அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, “என்னைவிட நீங்கள்தான் சிறந்த திரைக்கதையாசிரியர்!” என்று சுப்ரமணியபுரம் படத்தை கொண்டாடி மகிழ்ந்தார். அங்கேயே சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்று படக்குழுவினர் பலரும் வியந்து கூறி வருகின்றனர். கோலிவுட் வட்டாரத்தில் தற்போது இந்த பழைய நினைவுகள் மற்றும் பாராட்டுக்கள் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன.













