நீட் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் தமிழ்நாட்டில் 3 மாணவ மாணவிகள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த பிரச்சினை பெரிய அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது.
நடிகர் சூர்யா இந்த பிரச்சினைக்கு எதிராக நேற்று நீட் தேர்வு வேண்டாம் என்ற ரீதியில் மிக கடுமையான அறிக்கையை வெளியிட்டார். இதற்கு இரு விதமான கருத்துக்கள் ஆதரவும் எதிர்ப்பும் என்ற ரீதியில் உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு பயப்பட வைக்கிறது என தற்கொலை செய்து கொண்ட தர்மபுரி மாணவன் ஆதித்யா இரண்டு வருடங்கள் முன் நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 1200க்கு 595 மதிப்பெண்ணே பெற்றுள்ளார்.
50 சதவீத மார்க் மட்டுமே பெற்றுள்ள இவர் ஒரு ஆவரேஜ் ஸ்டூடண்ட்தான் இவர் போன்றோரை பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி நீட் எழுது டாக்டர் ஆயிடணும் என்று வற்புறுத்தி திணிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
இதற்காக எப்படி நீட் தேர்வை தடை செய்ய முடியும் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
இதை நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இது ஒரு எதிர்பாராத மரணம் என்றும் பெற்றோரின் அழுத்தம்தான் இதற்கு அதிகமாக இருக்கிறது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
Looks like parental pressure has been a big part of these unfortunate suicides.https://t.co/fcggmo02Cm
— Kasturi (@KasthuriShankar) September 15, 2020









