---Advertisement---

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு! அரசு அதிரடி அறிவிப்பு!

By Sri
Published on: May 4, 2020
---Advertisement---

தமிழகத்தில் மே மாதம் 7 ஆம் தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்ட நிலையில் பல விதங்களில் குடிகாரர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் எல்லையில் உள்ள பொதுமக்கள் மாநில எல்லைகளை கடந்து செல்வதை தடுப்பதில் சிரமம் இருப்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஆனால் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.