தமிழ் சினிமாவின் முத்திரைப் பதித்த இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ (Manjanathi) குறித்த விரிவான மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். தெற்கு தமிழகப் பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது: “இது முழுக்க முழுக்க பெண்களின் உணர்வுகள், பார்வைகள் மற்றும் நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. குறிப்பாக, தெற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல பெண்களின் கதைகளைச் சொல்லும் படமாக இது இருக்கும். இப்படத்தில் காயது லோஹர் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இதற்கான நியாயமான காரணங்கள் படத்தில் தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்லப்படும். மேலும், என் சினிமா பயணம் அவருடன் தான் தொடங்கியது என்பதால் நடிகர் கதிரை மீண்டும் இப்படத்தில் இணைப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.
View this post on Instagram
மேலும் இப்படத்தின் பிரம்மாண்டம் குறித்துப் பேசிய அவர், “இது ஒரு பெரிய அளவிலான திரைப்படமாகும். திருநெல்வேலியில் தொடங்கும் இப்படத்தின் பயணம் காஷ்மீர் வரை நீள்கிறது. இதனால் சுமார் 90 நாட்கள் படப்பிடிப்புத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இசைஞானி இளையராஜா இப்படத்தில் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வரமாகும். படப்பிடிப்பின் போது அவரை வரவழைத்தது எங்கள் உறவைக் கொண்டாடும் ஒரு வழியாகும். அவர் ஏற்கனவே எங்களுக்கு 3 பாடல்களைக் கொடுத்துவிட்டார், இது நம்பயில்லாத ஒரு தருணமாக இருந்தது. இந்தத் திரைப்படம் அவருக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒரு காணிக்கையாகவும் இருக்கும்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.













