தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) குறித்த புதிய சர்ச்சைகளும், விவாதங்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் அளித்துள்ள பேட்டிகளில், அஜித் குமாரின் சம்பளம் மற்றும் சினிமா பட விளம்பரப் பணிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
‘குட் பேட் அக்லி’ படத்திற்காக அஜித் பெற்ற அதே அதிகப்படியான சம்பளத்தை அவரது அடுத்த படத்திற்கும் பல தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொடுக்கத் தயங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சினிமா மார்க்கெட் நிலவரப்படி; அத்தகைய பெரிய தொகையை முதலீடு செய்ய எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்றும், ஆனால் தனது முந்தைய சம்பளத்தைக் குறைக்க அஜித் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஓராண்டாகப் பல தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அவர் தனது சொந்தத் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
மற்ற தயாரிப்பாளர்களுக்காக லாபப் பகிர்வு முறையில் வேலை செய்ய விரும்பாத அவர், தனது சொந்தப் படத்திற்காகச் சம்பளத்தைத் தவிர்க்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மற்ற மொழிப் பட நடிகர்களைப் போல அஜித் தனது திரைப்படங்களை விளம்பரப்படுத்துவது (Promotions) இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. கார் பந்தயங்கள் மற்றும் விளம்பரங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் அவர், தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று தயாரிப்பாளர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
திருப்பூர் சுப்பிரமணியம் தனது பேட்டியில், “தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நடிகர்கள் விளம்பரப் பணிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சமீபத்திய ரேசிங் பேட்டியின் மூலம் தனது விளம்பரங்களின் ரீச்சை உணர்ந்துள்ள அஜித், தனது வரவிருக்கும் ‘டேர்டெவில்’ படமாவது விளம்பரங்களில் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு இடையேயான இந்த சம்பள மற்றும் விளம்பர விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.













