---Advertisement---

Tears In Kollywood: இமயம் சாய்ந்த வேளையில் வெளியான கடைசிப் பொக்கிஷம்! பாரதிராஜா மறைவுக்கு பின் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ பட ‘பொய் வாடி’ வீடியோ சாங்… உருகும் ரசிகர்கள்!

By Sri
Published on: June 11, 2026
Legendary Tamil director Bharathiraja and Vadivukkarasi in his final onscreen appearance from Niram Marum Ulagil movie's Poi Vaadi video song.
---Advertisement---

தமிழ் சினிமா வரலாற்றில் கிராமத்து மண்ணின் ஆன்மாவையும், யதார்த்த மனிதர்களின் உணர்வுகளையும் ஆழமாகப் பதிவு செய்த “இயக்குநர் இமயம்” பாரதிராஜா ஜூன் 10 அன்று தனது 84-வது வயதில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் தற்பொழுது பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் மூழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த கோலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு அரசு மரியாதையுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் இந்த சோகமான சூழ்நிலையில், பாரதிராஜா திரையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரது கடைசி காவியமான ‘நிறம் மாறும் உலகில்’ (Niram Marum Ulagil) திரைப்படத்தின் மிக முக்கியமான இறுதிப் பதிவு தற்பொழுது வெளியாகியுள்ளது.

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமாஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் பிரிட்டோ ஜேபி (Britto JB) இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இதில் பாரதிராஜா மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் இணைந்து யோகி பாபு, ரியோ ராஜ், நட்டி நட்ராஜ், சாண்டி மாஸ்டர், கனிஹா, விிக்னேஷ்காந்த், ஏகன், மியூம் கோபி, ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பல டாப் ஸ்டார்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பாரதிராஜா – வடிவுக்கரசி இருவருக்கும் இடையேயான காலத்தைக் கடந்த முதிர்ந்த காதலைக் காட்டும் உணர்வுப்பூர்வமான மெலடி பாடலான ‘பொய் வாடி’ (Poi Vaadi Video Song) வீடியோ பாடல் தற்பொழுது யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைப்பில், ஏ.எஸ். தாவூத் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை, தனது எமோஷனலான குரலால் நெஞ்சை பிழியும் வகையில் பாடியுள்ளார் பிரபல பாடகர் அனந்து. “ஒவ்வொரு சுருக்கமும் ஒரு கதையைச் சொல்கிறது, ஒவ்வொரு புன்னகையும் ஒரு நினைவை வைத்திருக்கிறது” என்ற பின்னணியில், பாரதிராஜாவின் மறைவு தந்த தாள முடியாத துயரத்திற்கு மத்தியில் அவர் திரையில் தோன்றும் காட்சிகளோடு வெளியாகியுள்ள இந்த ‘பொய் வாடி’ வீடியோ பாடல் தற்பொழுது பார்ப்பவர் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இமயம் மறைந்தாலும் அவர் நமக்கு விட்டுச் சென்ற இந்த கடைசி கலைப் பொக்கிஷம் சமூக வலைத்தளங்களில் கோலிவுட் ரசிகர்களால் கண்ணீருடன் பயங்கரமாக ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.