---Advertisement---

CWC 7 Controversy : “பெண்களிடம் தப்பா நடந்துகிட்டாரு” – திவாகர் புகாருக்கு மாகாபா கொடுத்த அதிரடி பதிலடி; ஈவிபி செட்டில் நடந்தது என்ன?

By Sri
Published on: April 16, 2026
Ma Ka Pa Anand addressing the media regarding Watermelon Star Diwakar's allegations at Avadi police station.
---Advertisement---

சின்னத்திரை உலகத்துல இப்போ ஒரு பெரிய புயலே கிளம்பியிருக்கு. விஜய் டிவியோட ‘குக் வித் கோமாளி’ சீசன் 7 (Cook with Comali Season 7) ஆரம்பிச்ச ஒரு சில வாரங்களிலேயே அடிதடி, போலீஸ் கேஸ்னு பஞ்சாயத்து வேற லெவல்ல போயிட்டு இருக்கு. ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ (Watermelon Star) திவாகர், அந்த ஷோவோட ஹோஸ்ட் மாகாபா ஆனந்த் (Ma Ka Pa Anand), புகழ் (Pugazh) மற்றும் கானா வினோத் (Gaana Vinoth) மேல சென்னை கமிஷனர் ஆபீஸ்ல அதிரடியா ஒரு புகார் குடுத்திருக்காரு.

அந்தப் புகார்ல, சூட்டிங் ஸ்பாட்ல மாகாபா ஆனந்த் குடிபோதையில தன்னை இரும்பு கம்பியால அடிச்சதா திவாகர் சொல்லியிருக்காரு. இதனால அவரோட கால்ல காயம் ஏற்பட்டதாவும், கானா வினோத் தனக்கு கொலை மிரட்டல் விடுக்குறதாவும் அவர் கண்ணீரோட வீடியோ வெளியிட்டிருந்தாரு. 2026 ஏப்ரல் 12-ம் தேதி இந்த விவகாரம் காட்டுத்தீ மாதிரி பரவ ஆரம்பிச்சது. பிக் பாஸ் சீசன் 9-ல இருந்தே இவங்களுக்கிடையில இருக்குற அந்தப் பழைய பகை இப்போ விஸ்வரூபம் எடுத்து நிக்குது.

Cook with Comali Season 7 host Ma Ka Pa Anand and contestant Diwakar together in a promotional poster during the show launch.
“திவாகர் – மாகாபா மோதல்”: குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்!

தன்னோட தப்ப மறைக்க திவாகர் இப்படி பண்றாருன்னு மாகாபா ஆனந்த் இப்போ ஓப்பனா ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்காரு.

இந்த விவகாரம் குறித்து ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல ஆஜரான மாகாபா ஆனந்த், செய்தியாளர்கள்கிட்ட பேசும்போது பல அதிரடி தகவல்களைச் சொன்னாரு. “திவாகர் செட்ல இருக்குற பெண் போட்டியாளர்கள்கிட்டயும், ஒரு போட்டியாளரோட வைஃப்கிட்டயும் ரொம்ப தப்பா நடந்துக்கிட்டாரு. இதனால தான் சேனல் மேனேஜ்மென்ட் அவரை வெளில போகச் சொன்னாங்க. அதை மறைக்கத்தான் இப்போ எங்க மேல இப்படிப் பழி போடுறாரு”ன்னு மாகாபா எமோஷனலா பேசியிருக்காரு.

ஏற்கனவே ‘அண்டாகாகஸம்’ (Andakaagasam) ஷோவுலயும் திவாகர் இதே மாதிரி பண்ணதால தான் வெளில அனுப்புனாங்கன்னு மாகாபா சொல்லியிருக்காரு. 18 மணி நேரம் வேலை செய்யுற தன்னைப் பத்தி தப்பா பேசுறது நியாயமான்னு அவர் கேள்வி எழுப்பிருக்காரு. இப்போ இந்த விவகாரம் சோசியல் மீடியாவுல பெரிய விவாதமா மாறியிருக்கு. ஒரு பக்கம் திவாகருக்கு ஆதரவா குரல்கள் கேட்டாலும், மாகாபாவோட இந்த விளக்கத்துக்கு அப்புறம் பலரும் திவாகரை விமர்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. போலீஸ் விசாரணைக்கு அப்புறம் தான் இதுல இருக்குற உண்மை என்னன்னு முழுசா தெரியவரும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.