சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் நாயகி ரச்சிதா மகாலட்சுமி, சமீபத்தில் தனது புதிய வீட்டின் ‘ஹோம் டூர்’ வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். இந்த வீடியோவில் பலரும் எதிர்பார்க்காத ஒரு விஷயமாக, தனது வீட்டில் ஒரு பிரைவேட் பார் செட்டப் வைத்திருப்பதை அவர் காட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணியில் உள்ள ஒரு உருக்கமான காரணத்தை அவர் விளக்கியுள்ளார்.
ரச்சிதாவின் தந்தைக்குத் தனது இளமை காலம் முதலே சொந்தமாக ஒரு வீடு கட்டி, அதில் ஒரு பிரைவேட் பார் அமைக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்ததாம். தனது அப்பாவின் அந்த நீண்ட கால ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, ரச்சிதா பார்த்துப் பார்த்துத் தனது புதிய வீட்டில் இந்த ‘டானிக் ரூம்’ (Tonic Room) பகுதியை உருவாக்கியுள்ளார். இது வெறும் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமல்ல, தனது தந்தையின் நினைவாக அவர் செய்த ஒரு விஷயம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மது அருந்துவது குறித்து ரச்சிதா கொடுத்துள்ள அட்வைஸ் இப்போது இணையத்தில் செம்ம வைரல்.

“மது அருந்துவது என்பது ஒரு ஜாலியான விஷயம் தான், ஆனால் அதை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்” என ரச்சிதா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தினசரி ஒயின் குடித்தால் முகம் பொலிவு பெறும் எனச் சிலர் சொல்வார்கள், ஆனால் அது தவறு என்றும், தினமும் குடித்தால் உடல் எடை தான் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எப்போதாவது ஒருமுறை குடிப்பது தப்பில்லை, ஆனால் அது லிமிட்டாக இருக்க வேண்டும் என்பது ரச்சிதாவின் ஸ்ட்ரிக்ட் ரூல்.
தற்போது தனியாக வசித்து வரும் ரச்சிதா, தனது வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தனது ரசனைக்கு ஏற்ப வடிவமைத்துள்ளார். சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரச்சிதா, நிஜ வாழ்க்கையில் இவ்வளவு போல்டாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகளாக அவர் செய்த இந்தச் செயல், அவரது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரச்சிதா தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.
சினிமா மற்றும் சீரியல் வட்டாரத்தில் ரச்சிதாவின் இந்த போல்ட் ஹோம் டூர் வீடியோ தான் இப்போதைய ஹாட் டாபிக்.













