---Advertisement---

ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி காயத்துடன் வாலிபர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சிவபாண்டியன், பிரகதீஸ்வரன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சிவபாண்டியனுக்கும் பிரகதீஸ்வரனுக்கும் இடையே பூர்வீக சொத்து காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகதீஸ்வரன் அண்ணன் சிவப்பாண்டியன் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி இருக்கின்றார். இதில் பலத்த காயமடைந்த சிவபாண்டியன் அந்த சூழ்நிலையிலும் தம்பியின் கையில் இருக்கும் பட்டாக்கத்தியை பறித்து இருக்கின்றார்.

பின்னர் பிரகதீஸ்வரர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். பலத்த காயமடைந்த சிவபாண்டியன் நேரடியாக காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட பட்டாக்கத்தி தலையில் கழுத்தில் வெட்டு காயங்களுடன் வந்தவரை பார்த்த மருத்துவமனையில் இருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள்.

இது பற்றி தனியறையில் இருந்த டாக்டர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சிவபாண்டியனிடம் விசாரித்தபோது சொத்து பிரச்சினை காரணமாக தம்பி தன்னை வெட்ட வந்ததாகவும், அவரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறித்து பின்னர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sivakarthikeyan meeting with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

A bond that continues forever: சிவகார்த்திகேயன் – முதல்வர் விஜய் சந்திப்பு: நெகிழ்ச்சியில் திரையுலகம்!

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!