---Advertisement---

சென்னை பள்ளிகளில் ஏற்பட்ட சொற்பொழிவால் சர்ச்சை… 3 நாட்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…!

By Sri
Published on: September 7, 2024
---Advertisement---

சென்னை பள்ளிகளில் சொற்பொழிவால் சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் இருக்கும் பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 28ஆம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது காலையில் அசோக் நகர் பள்ளியிலும் மாலையில் சைதாப்பேட்டை பள்ளியிலும் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதனை மகாவிஷ்ணு என்ற நபர் நடத்தி இருந்தார்.

இரு பள்ளிகளிலும் இவர்தான் சொற்பொழிவு ஆற்றினார். காலையில் அசோக் நகர் பள்ளியில் அவர் சொற்பொழிவு நடத்திய போது வேத மந்திரங்கள் குறித்து பேசியதாக தெரியவந்திருக்கின்றது. அந்த வேத மந்திரங்களை அவர் மாணவிகளை திரும்ப சொல்ல வைத்து பேசியதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து சைதாப்பேட்டையில் அரசு பள்ளியில் பேசியபோது பாவம், புண்ணியம், மறுபிறவி உள்ளிட்டவற்றை குறித்து பேசி இருக்கின்றார்.

முன் ஜென்ம பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதனால் அந்த பள்ளியில் இருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டையில் ஏற்பட்டது. மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக தான் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நேற்று இது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இன்று மதியம் மகாவிஷ்ணு சென்னை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உடனடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில் 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Telugu actor Naveen Polishetty teams up with director Antony Bhagyaraj for a new movie produced by Mythri Movie Makers.

டோலிவுட்டில் அரங்கேறும் செம ட்விஸ்ட்..! ‘விஸ்வாசம்’ வசனகர்த்தா ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட பான்-இந்தியன் புராஜெக்ட்..!

Actor Ravi Mohan from Karathey Babu movie and Rocking Star Yash from Toxic movie set for a massive box office clash in Tamil Nadu.

தமிழ்நாட்டில் பயங்கர மோதல்..! யாஷின் ‘Toxic’ படத்திற்கு சவால் விடும் ரவி மோகனின் ‘காரத்தே பாபு’.. ‘தனி ஒருவன்’ சென்டிமென்ட்டில் தியேட்டர்களை அதிரவைக்கப்போகும் மாஸ் கம்பேக் ரேஸ்..!

Actor Nivin Pauly in a rugged biker avatar for his 50th film Vijayam directed by Alphonse Puthren.

11 வருட காத்திருப்புக்கு எண்ட் கார்டு..! அல்போன்ஸ் புத்திரன் – நிவின் பாலி மேஜிக் கூட்டணியின் ‘விஜயம்’ அனௌன்ஸ்மென்ட்.. பைக் ரேஸர் லூக்கில் அதிரடி காட்டப்போகும் NP50 மாஸ் ஃபர்ஸ்ட் லுக்..!

Actor Dhanush from OM movie and Superstar Rajinikanth from Jailer 2 movie representing box office release date reshuffle.

ரஜினி படத்திற்காக பின்வாங்கும் தனுஷ்..! அக்டோபர் பந்தயத்தில் இருந்து தள்ளிப்போகும் ‘OM’.. ஜெயிலர் 2 கொடுத்த மாஸ் நெருக்கடி.. மாவீரன், கங்குவா வரிசையில் அரங்கேறும் மெகா ரிலீஸ் மாற்றம்..!

Actresses Meenakshi Chaudhary, Simran, and Raashi Khanna officially onboarded for director Ashwath Marimuthu next movie Dharman.

அடுத்தடுத்து மெகா ஜாக்பாட்..! STR51-ஐ தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்துவின் ‘தர்மன்’ படத்திலும் இணைந்த மீனாட்சி சவுத்ரி.. சிம்ரன் மற்றும் ராஷி கண்ணாவுடன் கைகோர்க்கும் ஆர்.கே.எஃப்.ஐ பிரம்மாண்டத் தயாரிப்பு..!

Actor Vishnu Vishal practicing boxing with gloves for his upcoming sports drama directed by Arunraja Kamaraj.

“3 தயாரிப்பு நிறுவனங்கள் ரிஜெக்ட் செஞ்சாங்க..!” சொந்த தயாரிப்பில் களமிறங்கும் விஷ்ணு விஷால்.. சார்பட்டா பரம்பரை கொடுத்த சவாலால் அருண்ராஜா காமராஜ் படத்திற்காக எடுத்த விஸ்வரூப முடிவு..!