---Advertisement---

ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: August 25, 2024
---Advertisement---

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கின்றது. தமிழகம் நோக்கி வரும் மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மன்னார்குளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.