நடிகரும், தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவ – மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு பரிசும் வழங்கினார். அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணின் அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டார்.
இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தின் கவனத்தை விஜயின் மீது திருப்பியுள்ளது. விஜய் ஒன்றிய அரசு என பேசியது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்திருந்தார் பா.ஜ.க.தமிழக தலைவர் அண்ணாமலை.
விஜய் பேசியது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்திருப்பது போல இருக்கிறது என்றார்.

நீட் தேர்வு குறித்து விஜய் பேசியதற்கும் அண்ணாமலை பதிலளித்தார். கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வான தமிழகத்திலிருந்து மாணவ – மாணவியரைபற்றிய புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலே அதிலிருந்து பதில் கிடைத்து விடும் என்றார். அதே போல பா.ஜ.க. தமிழகத்தில் தனித்துவமாக வளர்ந்து வருகிறது.
ஒன்றிய அரசு என விஜய் திமுக சொல்வது போல சொல்லியிருப்பது தமிழக பா.ஜ.க.விற்கு நல்லது தான் என்றார். இரண்டாயிரத்து இருபதுக்கு முன்னர் வரை யாரும் மத்திய அரசு குறித்து பேசும் போது ஒன்றிய அரசு என குறிப்பிட்டது கிடையாது. ஆனால் அப்படி அழைப்பதை பழக்கமாக்கிக்கொண்டுள்ளனர் என்றார்.
பா.ஜ.கவை எதிர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே நீட் தேர்வு குறித்து பேசப்படுகிறது. பா.ஜ.காவை எதிர்க்கும் நோக்கில் இருந்து வரும் விஷயங்கள் எல்லாம் பா.ஜ.க.வை வளர்ச்சி பாதையை நோக்கியே கொண்டு செல்லும் என சொல்லியிருந்தார் அண்ணாமலை.













