---Advertisement---

மாரியப்பனுக்கு 2 கோடி- முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

Published on: September 1, 2021
---Advertisement---

ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த உடன் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடப்பதுண்டு. கடந்த முறை இது போல நடந்த பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தடகள வீரர் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார்.

தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.

தற்போதும் இவர் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இவரை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது.

அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன்மாரியப்பனின் 

-சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்! என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.