20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில் அவர்கள் கூறி இருக்கும் தகவல்கள்
1.ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவே இவ்வளவு வருடம் போராடினோம் இனி அமைதி நிலைநாட்டப்படும்.
2. மக்களின் வீடுகளில் அத்துமீறி நுழைய வேண்டாம் என வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது வெளிநாட்டினர் அச்சப்பட தேவையில்லை.
3.ஆப்கன் விமான நிலையங்களில் காத்திருப்போர் வீடு திரும்பலாம் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.
4.தாலிபான் ஆட்சியில் பெண் உரிமை பாதுகாக்கப்படும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் ஈடுபட மாட்டோம்.
5. தாலிபான்கள் ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படலாம் நடுநிலையாக செயல்பட வேண்டியது அவசியம் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.













