---Advertisement---

தொடர் மதவிழாக்கள் உத்தரகாண்ட் அரசுக்கு நீதிமன்றம் குட்டு

Published on: May 11, 2021
---Advertisement---

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில் கும்பமேளா விழா நடந்தது இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதும், பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் நடந்த நிகழ்வுகளாகும்.

இந்நிலையில் அடுத்தடுத்து மத சம்பந்தமான விழாக்களை நடத்த உத்தரகாண்ட் அரசு தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து ஒரு பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ மாநிலத்தில் கரோனா அதிகரிப்பைப் பார்த்து நாங்கள் எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்வதுபோல் செயல்பட முடியாது.

கடந்த ஓர் ஆண்டாகியும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில அரசு ஏன் முழுமையாகத் தயாராகவில்லை. இதில் 3-வது அலை வரலாம் எனவும் மத்தியஅரசு எச்சரித்துள்ளது.

கும்பமேளா திருவிழாவின் பாதிப்பிலிருந்து இன்னும் மாநிலம் மீளவில்லை. அதற்குள் புர்னாகிரி மேளா நடந்து, அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ளார்கள். கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்கு இதுபோன்ற திருவிழாக்கள் காரணமா.

இதில் ஆண்டு தோறும் நடக்கும் சர்தாம் யாத்திரையையும் நடத்துவதில் மாநில அரசு தயாராகி வருகிறது. இந்த திருவிழாவில் மக்களை அனுமதித்தால், கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடும்” எனத் தெரிவித்தனர்.

 

அதற்கு அரசு தரப்பில் பதில் கூறுகையில் “ சர்தாம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. கோயில்களை பராமரிக்கும் மேலாண்மை நிர்வாகம், பாதுகாப்பு வழிமுறைகளை யாத்திரைக்காக வெளியிட்டுள்ளது” எனத் கூறினர்

அதற்கு நீதிபதிகள் , நீங்கள் வகுத்த பாதுகாப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவார்கள் என எவ்வாறு உறுதியளிக்க முடியும். இதேபோன்றுதான் கும்பமேளாவில் சொன்னீர்கள், ஆனால், பாதுகாப்பு வழிமுறை பின்பற்றப்பட்டதா. கரோனா வைரஸ் பரவல்அதிகரித்து வரும்போது எவ்வாறு மதநிகழ்வுகளை அனுமதிப்பது.

மாநிலத்தின் அனைத்து வளங்களையும் ஒன்றாக இணைத்து கரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்.கண்களுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் போர் செய்து வருகிறோம், அனைத்து சக்திகளையும் திரட்டி போராட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன்படி குடிமக்களின் உயிரைக் காப்பது அரசின் கடமை. ஒவ்வொரு சொட்டு உழைப்பையும் அரசு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

மாநில அரசு தரப்பில் கரோனா பரவலைச் சமாளிக்க எவ்வாறு அரசு தயாராகியுள்ளது, மாநிலத்தில் மருத்துவமனைகள் நிலை, படுக்கை வசதிகல், ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்தனர்.

அப்போது நீதிபதிகள் அமர்வு, “ கரோனா 2-வதுஅலையின் உச்சம் இன்னும் மாநிலத்துக்கு வரவில்லை.மாநில அரசு முன்னெச்சரிக்கை தயாரிப்பு வேகம் போதாது. 3-வது அலையை மக்களும், அரசும் சேர்ந்து பணியாற்றி முறியடிக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும், குறிப்பாக கரோனா ஹாட்ஸ்பாட் மையங்களான ஹரித்துவாரில் பரிசோதனை மையங்களை உருவாக்கலாம். கிராமப்புறங்களில் மொபைல் டெஸ்டிங் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Deverakonda's character poster as Rowdy Janardhana for his upcoming film with Keerthy Suresh.

THE ROWDY IS BACK: “உலகையே எதிர்ப்பான்.. காதலுக்கு மட்டும் பணிவான்!” — விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ மிரட்டல் அப்டேட்; ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

Director Ramkumar and Actor Dhanush's upcoming action movie project discussion and delay reason.

DHANUSH – RAMKUMAR MOVIE UPDATE: “ஒரு வருஷம் கால்ஷீட் வேணும்!” — தனுஷ் படத்திற்காக ராட்சசன் இயக்குனர் போட்ட மெகா பிளான்; தள்ளிப்போக இதுதான் காரணமா?

Telugu actress Shivani Nagaram and actor-director Abishan Jeevinth for their upcoming Tamil film collaboration.

NEW ENTRY IN KOLLYWOOD: “தமிழ் சினிமாவிற்கு வரும் மற்றுமொரு தெலுங்கு வரவு!” — அபிஷன் ஜீவிந்த் படத்தில் ஷிவானி நாகரம்; உடன் இணையும் யோகலட்சுமி!

Actor Jiiva and Director Gokul reuniting for a comedy movie titled Disco Krishna Disco Radhai.

MASS REUNION OF ROWTHIRAM MOVIE UPDATE: “15 வருஷத்துக்கப்புறம் மீண்டும் அதே மேஜிக்!” — இயக்குனர் கோகுலுடன் கைக்கோர்க்கும் ஜீவா; வைரலாகும் ‘டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ ராதை’ அப்டேட்!

Actor Ken Karunas placing a production condition for his next movies under Street Boy Studios banner.

KEN’S BOLD MOVE: “என் பேனர்ல பண்ணா மட்டும்தான் நடிப்பேன்!” — ‘யூத்’ வெற்றிக்குப் பின் கென் கருணாஸ் போட்ட அதிரடி கண்டிஷன்; மிரண்டு போன தயாரிப்பு நிறுவனங்கள்!

Actor Sivakarthikeyan and Lubber Pandhu director Tamizharasan Pachamuthu collaborating for a new sports drama film after Seyon and Parasakthi.

THE ULTIMATE SPORTS DRAMA: “சேயோன் படப்பிடிப்பிற்கு நடுவே ஒரு மாஸ் அப்டேட்!” — லப்பர் பந்து இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்; மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேஜிக்!