நாளை மறுதினம் அதாவது வரும் திங்கட்கிழமை 10.05.2021 முதல் 24.05.2021 வரை தமிழக அரசால் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சிறிது நேரம் விற்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் யாரும் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் தவிர வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சலூன் கடைகள் திறக்க தடை இருப்பதாலும் இன்னும் 15 நாட்கள் ஊரடங்கு இருப்பதாலும் இன்றும் நாளையும் சலூன் கடைகள் திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.













