---Advertisement---

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

Published on: May 6, 2021
---Advertisement---

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து மாநில அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் காய்கறி, பலசரக்கு கடைகள் உள்ளிட்டவை மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தொற்று எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது, பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது,  தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுள்ளது. மற்ற இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம், பத்திரிகை விற்பனை போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது.  திரையரங்குகள் செயல்படாது. மாநிலம் முழுவதும் உள்ள அழகு நிலையங்கள் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும்,அத்தியாவசியப் பணிகளான பால்விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.  ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற் சாலைகள்  மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.  தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

இந்து புதிய முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன்கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்படஅனுமதி இல்லை. அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரட்சி அதிகாரிகளுடன் போலீசார் கண்காணிப்பாளர்கள். அரசு உத்தரவை மீறி யாரேனும் கடைகளை திருந்து வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட கடை மூடி சீல் வைத்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer launch banner of legendary director Singeetam Srinivasa Rao's upcoming movie Sing Geetham.

மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பு!.. மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ள ‘சிங் கீதம்’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட விசுவல்ஸ்!

Official release date announcement poster of Actor Karthi's spy action thriller Sardar 2 directed by PS Mithran.

“மிஷன் ஆஃப் எ லைஃப்… டைம்!”.. கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட பிரம்மாண்ட ஸ்லைடு.. செப்டம்பர் 10-ல் மிரட்டலாக வரும் ஏஜெண்ட்!

Official announcement title look first look banner of Superstar Rajinikanth's Dharman produced by Kamal Haasan RKFI banner.

“தர்மமே வெல்லும்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வமாக வெளியீடு.. ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட மெகா மாஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Actor Arya sharing official updates about Sarpatta Parambarai 2 shooting timeline during Anantha Kaadu movie press meet.

“கபிலன் மீண்டும் வர்றான்!”.. ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு எப்போது?.. ‘அனந்தன் காடு’ பிரஸ்மீட்டில் ஆர்யா உடைத்த மெகா ரகசியம்.. குத்துச்சண்டை உலகிற்குத் திரும்பும் பா. ரஞ்சித் டீம்!

Official announcement poster of Vikram Prabhu 26th movie presented by Romeo Pictures and composed by Yuvan Shankar Raja.

“காஸ்ட்லியஸ்ட் ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா!”.. விக்ரம் பிரபுவின் 26-வது படத்திற்குப் போடப்பட்ட மெகா பட்ஜெட் பிளான்.. நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி மியூசிக் ட்ரீட்!

Official announcement poster of Superstar Rajinikanth's Thalaivar 173 produced by Kamal Haasan featuring a blood-stained scalpel knife.

“ரத்தக் கறையோடு களம் இறங்கும் சூப்பர்ஸ்டார்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் இன்று வெளியீடு.. கரியரிலேயே முதல்முறையாக ரஜினி எடுக்கும் அந்த புதிய அவதாரம்!