கொரோனா பெருந்தொற்று வெகு வேகமாக நாளுக்கு நாள் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கொரோனாவால் கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருந்த மாநிலம் தான் மஹாராஷ்டிரா. சில நாட்களாக தொற்று குறைந்து வந்திருந்தது.
இந்த நேரத்தில் மீண்டும் தொற்று அதிகரித்திருப்பதாக கூறப்படும் இவ்வேளையில் ஊரடங்கை அதிகப்படுத்தியுள்ளது மஹாராஷ்டிர அரசு அடுத்த 15 நாட்களுக்கு கடுமையான 144 அமல்படுத்துவதுடன் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதை மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.













