கும்பகோணம் மிகப்பெரிய மாநகர அந்தஸ்தில் உள்ள ஒரு பெரிய நகரம் ஆகும் இங்கு கோவில்கள் அதிகம் உள்ளதால் இந்தியா முழுவதும் இருந்து மக்கள் வந்து குவிகின்றனர்.
அதனால் பல்வேறுவிதமான உள்கட்டமைப்புகளை இது பெற்றுள்ளது. மாநகரம் ஆவதற்கே தகுதியுள்ள கும்பகோணம் இன்னும் மாவட்டம் ஆகாமல் உள்ளது. சமீபத்தில் இங்கு பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் கும்பகோணத்தை மாவட்டமாக்க முயற்சி எடுப்பேன் என கூறினார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மிகப்பெரிய ஊர். இந்த ஊரில் சமீபத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி ஆரணியை தலைமையாக கொண்டு மாவட்டமாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.













