திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திரனுக்கு உரியஸ்தலமாக கருதப்படுகிறது. தினமும் கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் இங்கு வந்து குவிகின்றனர். இங்கு மாசி மாத பெளர்ணமியை ஒட்டி மலையப்ப ஸ்வாமி பக்தர்களுக்கு வந்து ஆசி வழங்கினார்.
அப்போது நான்கு மாட வீதிகளில் சுற்றி இருந்த பக்தர்கள் பெருமாளை கண்டவுடன் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் ஆராதனை செய்து தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் இதுபோல் மலையப்ப ஸ்வாமி வந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி வீதி உலா வந்து அருள்பாலிப்பது வழக்கம் ஆகும்.













