---Advertisement---

இந்தியாவில் 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்து… இத்தனை பேர் பலியா…? ரயில்வே வெளியிட்ட புள்ளி விவரம்…!

By Sri
Published on: September 16, 2024
---Advertisement---

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 748 பேர் பலியானதாக ரயில்வே நிர்வாகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ரயில் விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து தொடர்கதையாகி வருகின்றது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் சுமார் 248 பேர் பலியாகி இருக்கிறார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக செயல்பாட்டாளர் ராஜு வலக்கலா என்பவர் கேள்வி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு ரயில்வே நிர்வாகம் பதில் வழங்கியிருக்கின்றது. அதாவது 2023 மற்றும் 24 ஆம் நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரயில் விபத்துக்கள் நடந்திருக்கின்றன. இதில் 318 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 748 பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே அறிக்கை வெளியிட்டிருந்தது.

மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் விபத்துகளுக்கு ரயில்வே பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதுதான் காரணம் என்று ராஜு தெரிவித்திருக்கின்றார். இதற்கு இடையே வந்தே பாரத் சொகுசு ரயில்களை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசு மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தையும் சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.