கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தீபாவளியன்று வெளியான திரைப்படம்தான் நாயகன். மணிரத்னம் இயக்கத்தில் வந்த வித்தியாசமான திரைப்படம். பகல் நிலவு, இதயக்கோயில் படங்கள் போல் அல்லாமல் டிஃப்ரண்ட் ஜானரில் மெளனராகம் படத்தை இயக்கி இருந்தார்.
அந்த பார்முலாவிலேயே இன்று வரை மணிரத்னம் படம் இயக்கி கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இரண்டாவது வித்தியாசமான படம் என இந்த படத்தை சொல்லலாம்.
மும்பையை கலக்கிய தமிழ்நாட்டுக்காரரான வரதராஜன் முதலியார் என்பவரை பற்றிய கதையாக நாயகன் வந்தது.
இளையராஜாவின் சிறந்த இசை, கமல்ஹாசன், ஜனகராஜ் , கார்த்திகா போன்றவர்களின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இன்று வரை மக்கள் மனதை விட்டு நீங்காத படமாய் இது உள்ளது.
இந்த படத்துக்கு இன்றுடன் 34 வயது ஆகிறது.









