ஹிமாச்சல் பிரதேசத்துல உள்ள சிர்மௌர் மாவட்டம் ஷில்லாய் கிராமம், சமீபத்துல ஒரு ரேரான கல்யாணத்தால லைம்லைட்டுல வந்துடிச்சு.
அண்ணன் பிரதீப் நெகியும் தம்பி கபில் நெகியும் ஒரே பெண்ணா சுனிதா சௌஹான்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. சுனிதா வந்து பக்கத்துல இருக்கிற குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவங்க. இந்த கல்யாணம் ஜூலை 12 ல இருந்து 14 வரைக்கும் மூணு நாள் நடந்தது.
முன்னாடி இப்படி சகோதரங்க ஒரே பொண்ணை கல்யாணம் பண்ணுறது ரகசியமா நடக்குறது தான். ஆனா இப்போ அந்த ஊர்லே ஓபனாவே பண்ணி, 4000 பேருக்கும் மேலா கூட்டம், சத்தம், பாட்டு, கலாச்சாரம் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய விழா மாதிரி கொண்டாடினாங்க.
இந்த கல்யாணம் ஹட்டி சமுதாயத்துல பரம்பரையாக இருக்குற உஜ்லா பக்ஷ் மரபு படி நடந்தது. இதுக்கு ஜோடிதரா அல்லது த்ரௌபதி பிரதா நு வேற பெயரும் உண்டு. இப்போ மாடர்ன் டைம்ல தான் இருக்கோம், ஆனா இந்த மாதிரி பழைய மரபுகள் இன்னும் சில கிராமங்கள்ல நல்ல மரியாதையோட நடத்தப்படுது.
பிரதீப் அண்ணன் ஹிமாச்சல் அரசாங்கத்துல ஜல் ஷக்தி டிபார்ட்மென்ட்ல வேலை பண்ணறாராம். கபில் வெளிநாட்டுல ஹோட்டல் லைன்ல வேலை பாக்கறாரு. மூவரும் சேர்ந்து மனசு வைத்து தீர்மானிச்சதா இந்த கல்யாணம் நடந்தது.
இந்த வீடியோஸ் இப்போ சோசியல் மீடியால செம வைரலா போயிடுச்சு. பாரம்பரியத்தையும், குடும்ப ஒற்றுமையையும் ஒளிரச்செய்ற மாதிரி ஒரு கல்யாணம். சொந்தம், உறவுகள், பூஜை, சாப்பாடு எல்லாம் சேர்ந்து நம ஊரு கலாச்சாரத்துக்கு ஒரு சுவாரஸ்யமான மாதிரியாக இருக்கு.
இந்த மாதிரி நிகழ்வுகள் தான் நம்ம ஊரு பாரம்பரியத்தையும், எதிர்காலத் தலைமுறைக்கும் நினைவாக வைக்குற அருமையான சுட்டுமுனையாக இருக்கும்.
- Vignesh Shivan Interview: “Dhanush-உடன் என்ன பிரச்சனைன்னே தெரியல” – ஜன நாயகன் லீக் முதல் அஜித் வரை; விக்கி உடைத்த ரகசியங்கள்!
- Kattalan Trailer : “இந்திய சினிமாவிலேயே முதல்முறை” – 3 விதமான சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸுடன் வெளியான காட்டாளன் ட்ரைலர்; மிரட்டும் பிஜிஎம்!
- Ramayana Update : “முதல் பாகத்தில் சந்திப்பு இல்லை” – ரன்பீர் பற்றி ஓப்பனாக பேசிய யஷ்; ராமாயணம் 2-வில் தான் அந்த வெறித்தனமான மோதல்!
- Ajith Kumar Kind Gesture : “யாரும் கேட்காமலேயே தேடி வந்த உதவி” – மனு ஆனந்த் குடும்ப சோகத்தில் ஆறுதலாய் நின்ற அஜித்; அஜித்தின் மறுபக்கம்!
- KARA : “தனுஷ் கேட்ட அந்த ஒரு கேள்வி” – கர படத்தில் மிரட்டும் பிளாக் ஷேட் கேரக்டர்; மாமிதா பைஜூவை செலக்ட் பண்ணது இதனால தான்!













