---Advertisement---

பரபரப்பான சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்த நபர்… அடுத்து நடந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: August 31, 2024
---Advertisement---

உத்தரப்பிரதேசத்தில் சாலையின் நடுவே ஒரு நபர் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டிருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள சாலையின் நடுவே அதுவும் அங்குள்ள போலீஸ் சாவடிக்கும் முன்பு ஒரு நபர் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கின்றார். அந்த நபர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு அமர்ந்து போராட்டம் நடத்துகிறாரா? அல்லது ரவுடித்தனம் செய்கின்றாரா? என்பது எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும் பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு பயப்படாமல் நடுரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்திருக்கின்றார். இந்த சாலையில் அவரை கடந்து இருபுறமும் வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்றை அவரை இடித்துச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகின்றது.

இந்த வீடியோவை பத்திரிகையாளர் ரன் விஜய் சிங் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேசத்தில் ஒரு நபர் போலீசாவின் முன்பு நடுரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்திருக்கின்றார். ஒரு லாரி அவரை நெருங்கி வருகின்றது. லாரி அவரை இடித்ததை பார்க்க முடிகின்றது.

லாரி இடித்ததில் அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே விழுகின்றார். லாரி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விடுகின்றது. லாரி அவரை மோதினாலும் கீழே விழுந்த அந்த நபர் தனது நிலையிலிருந்து ஒரு அங்குலம் கூட நகராமல் இருக்கின்றார். தொடர்ந்து சாலையில் எப்படி விழுந்தாரோ அப்படியே அமர்ந்து இருக்கின்றார்.

அவரது நாற்காலி உடைந்தது, வாகனங்கள் மோதிவிடும் என்ற அச்சமில்லாமல் சாலையில் தொடர்ந்து அவர் அமர்ந்திருக்கின்றார். மீண்டும் தொடர்ந்து வாகனங்கள் அவரை கடந்து செல்கின்றன. போலீஸ் நிலையத்தின் வாசலில் ஒருவர் நின்றதாகவும் இந்த சம்பவம் குறித்து அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிகின்றது.

https://twitter.com/ag_Journalist/status/1829453268822474846

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Super Star Mohanlal and Meera Jasmine featured in Tharun Moorthy upcoming Malayalam movie Athimanoharam release poster.

தியேட்டர்களில் மோகன்லால் மேஜிக்..! லாலெட்டனின் ‘அதிமனோகரம்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. கிறிஸ்துமஸ் ரேஸில் குதிக்கும் பிரம்மாண்ட மலையாளத் திரைப்படம்..!

South Indian playback singer Sunitha Upadrashta talking about true feminism and women empowerment in a recent interaction.

“பெண்ணியம் என்றால் என்ன தெரியுமா..? பாடகி சுனிதா வெளியிட்ட அதிரடி கருத்து.. தவறாகப் புரிந்துகொள்ளப்படும் பெண்ணியம் குறித்து உடைத்துப் பேசிய தென்னிந்திய பிரபல பாடகி..!

Actor Prithviraj Sukumaran sharing thoughts about his demanding film shooting experiences and dedication of directors.

“97 டேக்குகள் வாங்கினோம்..!”படப்பிடிப்பு தளத்தில் நடந்த கடுமையான சம்பவத்தை வெளிப்படுத்திய பிருத்விராஜ் சுகுமாரன்.. சமரசம் செய்யாமல் பிரம்மாண்டத்தை செதுக்கிய படக்குழுவின் மெகா அர்ப்பணிப்பு..!

Rockstar Devi Sri Prasad musical journey announcement poster of Singeetam Srinivasa Rao's movie Sing Geetham.

“காதல் மற்றும் இசையில் நனையத் தயாராகுங்கள்!”.. சிங்கீதம் சீனிவாச ராவின் ‘சிங் கீதம்’ படக்குழுவின் மெகா சர்ப்ரைஸ்.. நாளை முதல் தொடங்கும் பிரம்மாண்ட மியூசிக்கல் ஜர்னி வெளியீடு.. ராக்ஸ்டார் DSP-யின் மிரட்டலான ஆல்பம் அப்டேட்!

Official announcement alert poster of Actor Jayam Ravi aka Ravi Mohan's upcoming movie Karathey Babu.

“கராத்தே பாபு தமிழ்நாடு அசெம்ப்ளிக்கு ரெடி!”.. நாளை மாலை 6 மணிக்கு ஜெயம் ரவியின் ‘கராத்தே பாபு’ படத்தின் மெகா மாஸ் அனௌன்ஸ்மென்ட்.. ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆவலோடு எதிர்பார்க்க வைத்த ரவி மோகனின் அதிரடி அப்டேட்!

Official emotional statement image of Actor Jayam Ravi under his name Ravi Mohan thanking fans and media.

“நாளுக்கு நாள் வலிமையாகி வருகிறேன்!”.. ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிரவைத்த ஜெயம் ரவியின் புதிய பதிவு.. நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி கூறி ரவி மோகன் வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை!