---Advertisement---

கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு எப்பொழுது? உயர் கல்வித்துறை அமைச்சரின் தகவல்!

By Sri
Published on: April 18, 2020
college final year exams
---Advertisement---

இந்தியாவில் மாநில எல்லைகள் முதல் கல்வி நிலையங்கள் வரை என அனைத்தும் கொரொனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழக பள்ளி கல்வித்துறை பொது தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்று தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழகங்களும் ஊரடங்கு உத்தரவால் செமஸ்டர் தேர்வுகள் இப்போது இல்லை என்றும் தேர்வு குறித்த அறிவிப்புகள் பின்பு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு எப்பொழுது என்று சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு என்றும், ஜூன் மாதத்திலேயே தேர்வு முடிவுகளை வெளியிட உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன, கல்லூரிகள் திறந்த உடன் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பிரத்யேக தகவல் அளித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.