யானையை வைத்து ஒருவர் நிகழ்த்தும் சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் யானைகளை பூங்காக்களில் காட்சி பொருளாக பார்க்கிறார்கள். அல்லது கோவிலில் பார்க்கலாம். அதிலும் ஆசிர்வாதம் செய்யும் யானைகளுக்கு வாழைப்பழம், பணம், தேங்காய் என எதாவது நீங்கள் கொடுக்க வேண்டும். யானையின் பலம் புரியாமல் அதை வைத்து பிச்சை எடுத்தும் வந்தனர். தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், யானையை வைத்து வாலிபர் ஒருவர் செய்யும் சாகச வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
நமக்கு தெரிஞ்சதெல்லம் பிச்சையெடுக்க வெக்கறதுதான் pic.twitter.com/Nd46VW8KRD
— ஆதிரன் (@Aathiraj8585) October 4, 2019








