வரலட்சுமி நோன்பு எப்போதும் ஆடி மாதம் வரக்கூடிய ஒரு பண்டிகையாகும். இந்த முறை ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு வந்துள்ளது.
வரலட்சுமி நோன்பு அன்று மஹாலட்சுமியிடம் என்ன வரம் கேட்டாளும் தருவாள் . பொருளாதாரம் என்ற செல்வம் மட்டுமின்றி கல்விச்செல்வம், குழந்தை செல்வம் என நமக்கு என்ன என்ன தேவையோ அனைத்தையும் மஹாலட்சுமியிடம் சொன்னால் அனைத்தையும் தந்தருள்வாள் மஹாலட்சுமி.
இன்று மஹாலட்சுமி படத்தை அலங்கரித்து வைத்து, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்ஷணங்களை வைத்து படைத்து அவளின் மந்திரங்கள், நாமாவளிகளை பாடி உங்களுக்கு என்ன குறை இருக்கிறதோ அதை மனப்பூர்வமாக பாடி தூப தீப ஆராதனைகள் செய்து பட்ஷணங்களை நைவேத்யம் செய்து மஹாலட்சுமியை வழிபட்டால் எல்லா செல்வங்களும் நமக்கு வந்து சேரும். நம் குறைகள் விலகி நிறைவான வாழ்க்கை வாழலாம்.













