தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இப்போ நெருப்பு மாதிரி தகதகன்னு எரிஞ்சுக்கிட்டு இருக்கு. ஒரு பக்கம் ஆளும் திமுக, இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக, இவங்க ரெண்டு பேரையும் ஓரம் கட்டப் பார்க்குற விஜய்யின் தமிழக வெற்றி கழகம்னு முக்கோணப் போட்டி பயங்கரமா சூடு பிடிச்சிருக்கு. இதுல இப்போ லேட்டஸ்ட்டா கிடைச்ச அப்டேட் என்னன்னா, பெரம்பூர் தொகுதியில விஜய் தாக்கல் செஞ்ச வேட்புமனுவுல ஒரு சின்ன சிக்கல் இருக்கிறதா சொல்லப்படுது.
விஜய் ஒரே நேரத்துல பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குனு ரெண்டு தொகுதிகள்ல போட்டி போடுறாரு. பெரம்பூர்ல கொடுத்த பிரமாணப் பத்திரத்துல தனக்கு எதிரா எந்த வழக்கும் இல்லைன்னு சொன்ன விஜய், திருச்சி கிழக்குல கொடுத்த மனுவுல 2025-ல ஒரு வழக்கு நிலுவையில இருக்குறதா சொல்லியிருக்காராம். இந்த முரண்பாடு தான் இப்போ பெரிய தலைவலியா மாறியிருக்கு. ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடியுறதுக்குள்ள இதை சரி பண்ணலைன்னா, ஏப்ரல் 7-ம் தேதி நடக்குற பரிசீலனையில விஜய்யோட மனு தள்ளுபடி ஆகவும் வாய்ப்பு இருக்கு.
ஸ்டாலின் கொடுத்த அந்த ‘சிங்கம்’ பதிலடி… இதற்கிடையில, எடப்பாடி பழனிசாமிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையிலான வார்த்தைப் போர் இப்போ உச்சக்கட்டத்தை எட்டியிருக்கு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவரோட கடைசி காலத்துல ஸ்டாலின் ஒரு கைதி மாதிரி வச்சிருந்தாருன்னு எடப்பாடி ஒரு கூட்டத்துல பேச, அது இப்போ திமுக தரப்பை செம காண்டுல ஆழ்த்தியிருக்கு. இதுக்கு பதில் கொடுத்த ஸ்டாலின், “என் தலைவன் ஒரு சிங்கம், நான் அந்தச் சிங்கத்தோட மகன்” அப்படின்னு மாஸா ஒரு பதிலடி கொடுத்திருக்காரு.
தேர்தல் நெருங்குற நேரத்துல இந்த மாதிரி பெர்சனல் அட்டாக் பண்றது எடப்பாடியோட பலவீனத்தைக் காட்டுதுன்னு ஸ்டாலின் விளாசித் தள்ளியிருக்காரு. எடப்பாடி பழனிசாமி தன்னோட தேர்தல் பிரச்சாரத்துல தொடர்ந்து திமுக குடும்ப அரசியலை குறிவச்சு பேசிட்டு வர்றாரு. ஆனா ஸ்டாலின் இப்போ கருணாநிதியோட புகழை முன்னிறுத்தி சென்டிமென்ட் அரசியல்ல இறங்கியிருக்காரு. இது ஓட்டு அரசியல்ல எந்தளவுக்கு எதிரொலிக்கும் அப்படிங்கிறது தான் இப்போதைய மெயின் மேட்டர்.
செங்கோட்டையனின் 200 சீட் கணக்கு… அதிமுகவுல இருந்து பிரிஞ்சு வந்து இப்போ டிவி்கே-வுல இருக்குற சீனியர் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் ஒரு அதிரடியான கணிப்பை சொல்லியிருக்காரு. வர்ற தேர்தல்ல விஜய் தலைமையிலான டிவி்கே கட்சி கண்டிப்பா 200 இடங்களுக்கு மேல ஜெயிக்கும்னு அவர் அடிச்சு சொல்லியிருக்காரு. கொங்கு மண்டலம் முழுக்க விஜய் அலை வீசுது, திராவிட கட்சிகளுக்கு மாற்றா மக்கள் விஜய்யை தான் பாக்குறாங்க அப்படின்னு அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்காரு.
ஆதிவ் அர்ஜுனா போன்ற முக்கிய நிர்வாகிகள் ஒரு பக்கம் விஜய்யோட வேட்புமனு சிக்கலை சரி பண்ண ஓடிக்கிட்டு இருக்குற நேரத்துல, செங்கோட்டையனோட இந்த பேச்சு டிவி்கே தொண்டர்களுக்கு ஒரு பூஸ்ட் கொடுத்திருக்குன்னே சொல்லலாம். திமுக மற்றும் அதிமுக என ரெண்டு பெரிய கட்சிகளையும் ஒரே நேரத்துல விஜய் எப்படி சமாளிக்கப் போறாருங்கிறது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. வேட்புமனு குளறுபடியை விஜய் எப்படி சரி பண்ணப்போறாருன்னு இன்னும் ரெண்டு நாள்ல தெரிஞ்சுடும்.













