---Advertisement---

திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

Published on: April 11, 2021
---Advertisement---

கொரோனா பரவல் வேகம் முன்பை விட அதிகமாக இருப்பதாலும் இது இரண்டாம் அலை என்பதாலும் மீண்டும் அனைத்து நாடுகளிலும் கொரோனா முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதுமே கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது.

இதில் ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி கோவிலுக்கு நாளொன்றுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்வதால் அதிலும் இலவச தரிசனத்துக்கு அதிக பக்தர்கள் வந்து செல்வதால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விரைவு தரிசனம் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.