திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் உள்ளவர் முதல்வர் எடப்பாடி. நேற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். நேற்று மாலையே திருப்பதி சென்று விட்ட முதல்வர் அங்கு நேற்று தங்கினார்.
இன்று காலையில் கோவிலுக்கு சென்று வழிபட்ட முதல்வரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்பு கோவில் அதிகாரிகள் திருப்பதி ஏழுமலையான் புகைப்படத்தை அவருக்கு கொடுத்தனர்.
கோவிலில் உள்ள அகிலாண்டம் பகுதியில் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் முதல்வர் வழிபட்டார்.













