---Advertisement---

ஆளுநர் vs ஸ்டாலின்: தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு வெளிநடப்பு – பின்னணி என்ன?

By Sri
Published on: January 20, 2026
Tamil Nadu Governor RN Ravi walkout from Assembly 2026 CM Stalin resolution
---Advertisement---

தமிழக அரசியல்ல இப்போதெல்லாம் ஜனவரி மாசம் வந்துட்டாலே போதும், சட்டப்பேரவையில ஒரு பயங்கரமான சஸ்பென்ஸ் படம் ஓட ஆரம்பிச்சிடுது. 2026-ம் வருஷத்தோட முதல் கூட்டத்தொடர் இன்னைக்கு ஆரம்பமானது. ஆனா, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ள வந்த 10 நிமிஷத்துலயே “சலாம்” போட்டுட்டு வெளில போனதுதான் இப்போ ஊரு ஃபுல்லா பேச்சா இருக்கு. இது ஒன்னும் புதுசு இல்ல, தொடர்ந்து நாலாவது ஆண்டா ஆளுநர் இப்படி ஒரு ‘ஸ்கிரிப்ட்’ செஞ்சுட்டு போயிருக்காரு.

சம்பவம் என்ன? வழக்கம் போல அரசு தயாரிச்ச உரையை ஆளுநர் கையில கொடுத்தாங்க. ஆனா, எடுத்தவுடனேயே “தேசிய கீதத்தை அவமதிச்சிட்டாங்க, என் மைக்கை ஆஃப் பண்ணிட்டாங்க”ன்னு ஆளுநர் தரப்பு கொதிக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆளுநர் பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே சபையில சலசலப்பு அதிகமாக, “சரியான மரியாதை இல்லை”ன்னு சொல்லிட்டு விருவிருன்னு வெளில போயிட்டாரு.

பதிலடி கொடுத்த ஸ்டாலின்: ஆளுநர் வெளில போன வேகத்தை விட, முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்த வேகம் அதிகம். “ஆளுநர் சபையை அவமதிச்சிட்டாரு, அவர் வாசிக்காத உரையே வாசிச்சதா கணக்குல எடுத்துக்கப்படும்”னு ஒரு அதிரடி தீர்மானத்தை பாஸ் பண்ணிட்டாரு. “ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதுக்கு?”னு அண்ணாவோட அந்த பழைய பஞ்ச்-ஐ எடுத்து இப்போ சோசியல் மீடியால நம்ம ஊர் பசங்க பயங்கரமா டிரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க.

நம்ம ஊர் யதார்த்தம்: நிஜத்தைச் சொல்லப்போனா, இது வெறும் அரசியல் மோதல் மட்டும் இல்ல; இது ஒரு பயங்கரமான ‘ஈகோ யுத்தம்’. ஒரு பக்கம் ஆளுநர் மாளிகை தன் அதிகாரத்தை காட்ட நினைக்குது, இன்னொரு பக்கம் மாநில அரசு தன் உரிமையை விடமாட்டேன்னு நிக்குது. மக்கள் பிரச்சனையை விவாதிக்க வேண்டிய புனிதமான இடத்துல, இவங்களோட இந்த ‘மல்யுத்தம்’ எப்போதான் முடியுமோன்னு சாமானிய மக்கள் வேடிக்கை பாக்குறாங்க. இது அரசியலா இல்ல வெறும் பழிவாங்கும் படலமான்னு காலம் தான் பதில் சொல்லணும்.

Sri