தமிழில் நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுதீப். கன்னடத்தில் முன்னணி ஹீரோவான சுதீப்புக்கு கன்னடத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இன்று நடிகர் சுதீப்பின் 50வது பிறந்த நாள். இதனால் ஆர்வக்கோளாறு உள்ள ரசிகர்கள் சிலர் ஒரு எருமை மாட்டை பலி கொடுத்து தங்கள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடினர்.
கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.









