இலங்கை பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி விட்டதால் அங்கு பெட்ரோல், டீசல், கியாஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் தட்டுப்பாடு, ஏற்பட்டுள்ளது இதனால் இலங்கையில் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டது.
மின்சாரமும் தொடர்ந்து தடைபட்டு வருவதால் மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் 1 மணி நேரம் இரண்டு மணி நேரம் என ஆரம்பித்த மின் தடை தற்போது சொல்ல முடியாத அளவு 10 மணி நேரம் மின் தடை என்று இருந்து வந்தது.
இன்று முதல் 13மணி நேரம் மின் தடை என்ற அளவுக்கு மாறியுள்ளது. இதனால் இலங்கை நாட்டினர் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.













