ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வன்னியர் சமுதாய அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூரி இப்படத்தை பார்த்து விட்டு தெரிவித்த கருத்து என்னவென்றால்,
இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. என கூறியுள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள சூர்யா இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு என கூறியுள்ளார்.








