கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை அய்யப்ப விரதம் துவக்கப்பட்டது. முதலில் டிசம்பர் மாத இறுதியில் அய்யப்பனுக்கு மண்டல் பூஜை நடைபெற்றது இதில் ஏராளமானோர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஐயப்ப விரதம் இருந்து சபரிமலை சென்று வந்தனர்.
இரண்டாம் கட்டமாக மகரஜோதி பூஜை நடந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் மகர ஜோதி தரிசனம் மற்றும் பூஜை நடைபெற்றது.
வரும் 20ம் தேதி வரை சபரிமலை மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சபரிமலையில் தரிசனம் செய்தார்













