விஜய்சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து விட்டார். துவக்கத்தில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்த இவர் “தென் மேற்கு பருவக்காற்று” படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வில்லனாக கூட நடித்தார்.
“மகாராஜா” படத்தின் மூலம் தனது சினி கேரியரில் ஹாஃப் செஞ்சரி அடித்து விட்டார், நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள படத்தில் முடிதிருத்துபவராக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், பாரதிராஜா, அபிராமி, முனீஷ்காந்த், நட்டி உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

காணாமல் போகும் லட்சுமியை தேடி அலையும் விஜய்சேதுபதி. முதல் பாதியில் நல்ல கலகலப்பு. வாய் விட்டு சிரிக்க வைக்கும் சீன்கள் ஏராளம். போலீஸிடம் சென்று தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என சொல்லும் விஜய்சேதுபதி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
லட்சுமி மனித இனமா?, பொன்னா?, பொருளா? இது தான கதை. படத்திற்கு பின்னனி இசை பக்கா பொருத்தமாக இருக்கிறது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் தான். அடுத்த அடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளார் இயக்குனர் இதுவே படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.
அனுராக் காஷ்யப்ன் வில்லன் பெர்ஃபாமென்ஸ் பக்கா. விஜய்சேதுபதி தான் படத்திற்கு முழு பலமே. நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஒரு சில இடத்தில் சின்ன சின்ன பிழைகள் அதிலும் குறிப்பாக டப்பிங் விஷயத்தில் இருந்தாலும் அதை எல்லாம் மறக்க செய்து விடுகிறது திரைக்கதை நகரும் விதம்.
தனது 50வது படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் விஜய்சேதுபதி. மொத்தத்தில் “மகாராஜா” மனதில் வலம் வருகிறார்.







